தேர்தலுக்காக கரோனா எண்ணிக்கை குறைக்கப்பட்டதா? நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதில்

கரோனாவின் எண்ணிக்கை தேர்தலுக்காக குறைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை பதிலளித்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

கரோனாவின் எண்ணிக்கை தேர்தலுக்காக குறைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை பதிலளித்தார்.

தமிழகத்தில் கடந்த மாதத்தில் மூன்றாம் அலை உச்சமடைந்திருந்த நிலையில், தற்போது ஒருநாள் பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழகத்தில் தேர்தலுக்காக கரோனா எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை. கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் 800 படுக்கைகள் உள்ளன. ஆனால், 20 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். யார் வேண்டுமானாலும் சோதித்து பார்க்கலாம் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com