கரோனாவின் எண்ணிக்கை தேர்தலுக்காக குறைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை பதிலளித்தார்.
தமிழகத்தில் கடந்த மாதத்தில் மூன்றாம் அலை உச்சமடைந்திருந்த நிலையில், தற்போது ஒருநாள் பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இதையும் படிக்க | ‘தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பட்ஜெட் உதவும்’: பிரதமர் மோடி
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழகத்தில் தேர்தலுக்காக கரோனா எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை. கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் 800 படுக்கைகள் உள்ளன. ஆனால், 20 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். யார் வேண்டுமானாலும் சோதித்து பார்க்கலாம் எனத் தெரிவித்தார்.