கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற நான்கு சம்பவங்களில் ஏழு படகுகள் சிறைபிடிக்கப்பட்டதுடன், தமிழ்நாட்டைச் சோ்ந்த 47 மீனவா்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவங்கள் நாகப்பட்டினம் பகுதியில் உள்ள பாக் வளைகுடாவில் பாரம்பரிய மீன்பிடித் தளங்களை நம்பியுள்ள ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவா்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்துவதும், அவா்களது உடைமைகளை கொள்ளையடிப்பதும் சட்டத்துக்குப் புறம்பான செயல் மட்டுமல்லாது, மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாக உள்ளது.