தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிக்க | உக்ரைன் போர்: இந்தியா - பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை
இந்நிலையில் இதுதொடர்பாக மத்திய அரசை வலியுறுத்துவதற்காக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தில்லி சென்றார். அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய அவர் தமிழக நிதி நிலைமை, ஜிஎஸ்டி வரி தொடர்பாக ஆலோசித்தார்.