உக்ரைன் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆலோசனை நடத்தினார்.
உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், உக்ரைனின் தற்போதைய சூழல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸுன் தொலைபேசியில் கலந்துரையாடினர்.