மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

உக்ரைன் போர்: இந்தியா - பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை

உக்ரைன் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆலோசனை நடத்தினார்.

News image

கோப்புப்படம்

Updated On :24 பிப்ரவரி 2022, 1:20 pm

உக்ரைன் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆலோசனை நடத்தினார்.

உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் தற்போதைய சூழல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸுன் தொலைபேசியில் கலந்துரையாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.