பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஆப்கனுடன் போர்ப் பதற்றம்! 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷியா செல்கிறார் பாக். பிரதமர்!

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ரஷியா செல்வது குறித்து...

ரஷிய அதிபர் புதின் - பாகிஸ்தான் பிரதமர் ஷரீஃப் (கோப்புப் படம்) - AP, AFP

Published On :

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் மோதல்கள் வெடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அடுத்த வாரம் ரஷியாவுக்குச் செல்வதாக, பாகிஸ்தான் செனட்டின் பாதுகாப்புக் குழு தலைவர் முஷாஹித் ஹுசைன் சையத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தில், மாஸ்கோ செல்லும் பிரதமர் ஷரீஃப் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை நேரில் சந்தித்து உரையாடுவார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ரஷிய அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல்கள் வெடித்துள்ளதால், இருநாடுகளும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென ரஷிய அரசு வெள்ளிக்கிழமை (பிப். 27) வலியுறுத்தியுள்ளது. இதனால், இந்த விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக பிரதமர் ஷரீஃப் மாஸ்கோ செல்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, 6 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2022 பிப். 24 அன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு முறைப் பயணமாக ரஷியா சென்றிருந்தார். அன்றுதான் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Pakistani Prime Minister Shahbaz Sharif is reportedly on a state visit to Russia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.