புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர்நிறுத்தத்துக்கு சீனா அழைப்பு!

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போரை நிறுத்துமாறு இரு நாடுகளையும் சீனா அழைப்பு

News image
தற்கொலைப் படைத் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர் பலி- கோப்புப் படம்
Updated On :27 பிப்ரவரி 2026, 10:40 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான போரை நிறுத்துமாறு இரு நாடுகளையும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் நட்பு நாடாக விளங்கும் சீனா, இவ்விரு நாடுகளுக்கிடையேயான போரை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான வன்முறை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சீனா கூறியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் மாவோ நிங்

சீன வெளியுறவு அமைச்சர் மாவோ நிங்

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் மாவோ நிங் கூறுகையில், இரு தரப்பினரும் அமைதியுடன் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். விரைவில் போரை நிறுத்த வேண்டும். வன்முறையைத் தவிர்க்க வேண்டும்.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான மோதலை சீனா தொடர்ந்து மத்தியஸ்தம் செய்து வருகிறது. மேலும், பதற்றங்களைத் தணிப்பதில் தொடர்ந்து ஆக்க்கப்பூர்வமான பங்களிக்கவும் சீனா தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.