தமிழ்நாடு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பிரதமரோ, உள்துறை அமைச்சரோ நேரில் பார்க்காதது ஏன்? என சு. வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், தமிழகத்துக்கு வருவதும் இல்லை, தருவதும் இல்லை.
குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று 1000 கோடி அறிவிக்கிறார் பிரதமர்.
தமிழ்நாடு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எட்டிப் பார்க்காதது ஏன்?
தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இயற்கை பேரிடரை எதிர்கொண்ட குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு ரூ3,063.21 கோடி நிதியை மத்திய அரசு அண்மையில் ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.