அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நீட் தேர்வுக்கு முற்றுப் புள்ளி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் இலக்கு என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜனவரி 2022, 5:41 am

DIN


நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் இலக்கு என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தொடர்பான சட்டப்பேரவை அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தொடங்கியது.

கூட்டத்தின் தொடக்க உரையில் முதல்வர் பேசியது:

"திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் இந்தியப் பிரதமரை கடந்தாண்டு ஜூன் 17-ம் தேதி நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவை கடந்தாண்டு செப்டம்பர் 13-ம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றினோம்.

அந்த சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருக்கிறார் ஆளுநர்.

சட்டத்தை நிறைவேற்றும்போது ஆளுநர் அதை மதித்து ஒப்புதல் அளிப்பதுதான் மக்களாட்சித் தத்துவம். எனவே, நான் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பவில்லை.

மாநில உரிமையும், சட்டப்பேரவையின் சட்டம் இயற்றும் அதிகாரமும் கேள்விக்குறியாகும் சூழல் உருவானதால்தான் அவசரமாக, அவசியத்துடன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளோம்.

இங்கே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், ஒரு வரைவுத் தீர்மானத்தை எடுத்துரைப்பார். அனைவரின் இலக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும், தமிழ்நாடு மாணவர்களின் நலனைக் காப்பாறிட வேண்டும் என்பதுதான்.

ஆகவே, வரைவுத் தீர்மானம் மீது ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க வேண்டும்" என்றார் முதல்வர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.