தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழக காவல்துறையில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது. அவா்களில் 18 பேருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. அதில், காவல்துறையின் மிகவும் முக்கியமான பிரிவான உளவுத்துறையின் ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் தமிழக உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி. என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார். தற்போது 56 வயதான ஆசியம்மாள் தூத்தக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் குரூப் 1 தேர்வு மூலமாக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்டிவிட்டர் பதிவில், தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் தூத்துக்குடி கொங்கராயக்குறிச்சியில் பிறந்த ஆசியம்மாளுக்கு என்னுடைய வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.