சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி ஒன்றிய, நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா, தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடும் நிகழ்ச்சி சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்டச் செயலர் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி இவ்விழாவிற்கு தலைமை வகித்து சமத்துவ பொங்கல் வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு சூரிய பகவானை வணங்கினார்.
சங்ககிரி ஒன்றிய திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவினையொட்டி சேலம் மேற்குமாவட்ட செயலர் (பொ) டி.எம்.செல்வகணபதி மகளிரணி நிர்வாகிகளுக்கு பொங்கல், கரும்புகளை வழங்கி வாழ்த்து தெரிவிக்கிறார்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துகளை கூறினார். அதனையடுத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல், கரும்பு, சுண்டல் ஆகியவைகளை வழங்கிப் பேசினார். முன்னதாக அவர் திமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இதையும் படிக்க | இரண்டு ப்ரீபெய்டு திட்டங்கள் அறிமுகம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு
சங்ககிரி முன்னாள் ஒன்றியச் செயலர் பி.தங்கமுத்து முன்னிலை வகித்தார். நகரச் செயலர் எல்ஐசி சுப்ரமணி வரவேற்றார். மாவட்ட துணை செயலர்கள் க.சுந்தரம், சம்பத்குமார், முன்னாள் பால்வளத்தலைவர் எம்.சின்னதம்பி, மேற்கு மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் எஸ்.கிறிஸ்டோபர், துணை அமைப்பாளர்கள் ஆர்.அருள்பிரகாஷ், மாணிக்கசுந்தர், முன்னாள் நகரச் செயலர் முருகன்,முன்னாள் மாவட்ட பிரதிநிதி தளபதி சண்முகம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.