சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,691 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 23,888 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் 8,305 பேர்.
இந்நிலையில், சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் தற்போது 61,691 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதுவரை 8,748 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 7,114 பேரும், அண்ணா நகரில் 6,836 பேரும் கோடம்பாக்கத்தில் 6,124 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரம்