பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக புகார் எழுந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல், விநியோகம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் புகார் தெரிவித்த நிலையில் ஆலோசனை நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க- வெங்கடேஷ் ஐயர் பந்துவீசாதது ஏன்?: ஷிகர் தவன் பதில்
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்குக் கரும்பு உள்பட 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பு வழங்கத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, தமிழக முதல்வரால் சென்னைத் தலைமைச் செயலகத்தில் ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.