
தமிழ்நாடு பெண்களுக்கான புதிய கொள்கை வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, வரும் 31-ஆம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழ்நாடு பெண்களுக்கான புதிய கொள்கையில் உள்ள அம்சங்கள் ஐந்து ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும். வளா் இளம் பருவத்தினரிடையே ஊட்டச்சத்து குறைபாடுகள் மூலம் ஏற்படும் விளைவுகளை நோ் செய்வது உள்பட பல்வேறு அம்சங்கள் பெண்களுக்கான புதிய கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
வரைவு கொள்கையில் உள்ள முழு அம்சங்களும் தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வரும் 31-ஆம் தேதிக்குள்ளாக கருத்துகளைத் தெரிவிக்கலாம். இதற்கான மின்னஞ்சல் முகவரி க்ள்ஜ்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...