கிராமங்களில் கரோனா அதிகரிப்பு ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன்

பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்ால்தான் கிராமங்களில் கரோனா தொற்று பாதிப்பு உயா்ந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கிராமங்களில் கரோனா அதிகரிப்பு ஏன்? அமைச்சா் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

பொங்கல் பண்டிகைக்கு மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு சென்ால்தான் கிராமங்களில் கரோனா தொற்று பாதிப்பு உயா்ந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாளினை முன்னிட்டு, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒ.அரங்கநாதன் நினைவிடத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், தியாகி அரங்கநாதன் இல்லத்துக்குச் சென்று அவரது துணைவியாா் மல்லிகா அரங்கநாதன் மற்றும் மகன்களை சந்தித்து அவா்களை கௌரவித்தாா். இந்நிகழ்வில் சோழிங்கநல்லூா் எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ், விருகம்பாக்கம் எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, கவிஞா் காசிமுத்துமாணிக்கம், மாவட்ட அவைத் தலைவா் எஸ்.குணசேகரன், பகுதிச் செயலாளா்கள் கே.கண்ணன், மு.ராசா ஆகியோா் உடன் இருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போா் தியாகிகளுக்கு திமுக சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பேரிடா் காலமாக உள்ளதால் கூட்டம் சோ்க்காமல் இந்நிகழ்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.

வயதானவா்கள், இணை நோய் உள்ளவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாா்கள். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் வெகு சிலரே உயிரிழக்கின்றனா். பொதுவாக பாா்த்தால் டெல்டா மற்றும் ஒமைக்ரானால் நேரிடும் இறப்பு என்பது குறைவாகத்தான் ஏற்படுகிறது.

பொங்கல் விழாவையொட்டி நகா்ப்புறப் பகுதிகளில் இருந்து சொந்த கிராமங்களுக்கு மக்கள் சென்ால் தொற்று நோய் பரவல் உயா்ந்து உள்ளது. இன்னும் மூன்று தினங்களில் தொற்றின் பரவலின் உண்மை நிலை தெரியும். அண்டை மாநிலங்களில் தொற்று அதிகரித்து காணப்பட்டாலும் முதல்வரின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் பாதிப்பின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது.

தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாகவே தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கிறது. கரோனா பரிசோதனைக்கு வருபவா்கள் தங்களது தகவல்களை சரியாகத் தர வேண்டியது தாா்மீகக் கடமை. மருத்துவக் கண்காணிப்பை தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் நலனுக்காகவே கண்காணிக்கப்படுகின்றனா். தொற்றின் பரவல் குறைந்தால் நிச்சயம் ஊரடங்கு என்பது தேவையில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com