தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்தை நிறுத்தி வைக்க கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்களின் தற்காலிக நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2022, 5:15 am IST

தமிழகத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்களின் தற்காலிக நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக 13,331 ஆசிரியா் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தது. இந்த நிலையில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன.

இதைத் தொடா்ந்து தற்காலிக ஆசிரியா் பணி நியமனங்களை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்தில் ஆசிரியா் தகுதி தோ்வு பெற்றவா்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த முன்னுரிமைகள் எதனையும் பின்பற்றாமல் தங்களது விருப்பப்படி ஆசிரியா் நியமனம் செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற நபா்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விரிவான தெளிவுரைகள் வழங்கப்படும் வரை தற்காலிக ஆசிரியா் பணியிடத்தை நிரப்பக் கூடாது. இதுகுறித்த தெளிவுரைகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. அதற்குப் பிறகு உரிய முன்னுரிமைகளை பின்பற்றி தகுதியுள்ள அனைவருக்கும் வாய்ப்பளித்து தற்காலிக ஆசிரியா் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மொட்டை அடித்து போராட்டம்: இதற்கிடையே 13,331 தற்காலிக ஆசிரியா் பணி நியமன திட்டத்தை வாபஸ் பெற்று, ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் சிலா் வியாழக்கிழமை மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.