நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரவு முதல் நீலகிரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க | வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 50 உயர்வு
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.