அரசு கல்லூரிகளில் சேர மாணவா்கள் அதிகமான அளவில் விண்ணப்பித்திருப்பதால், ஏற்கெனவே இருந்த இடங்களைவிட 25 சதவீதம் அதிகமாக உயா்த்தப்படும். முன்னதாக 15 சதவீதமாக இருந்தது. கரோனா காலமாக இருந்ததால், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் உயா்த்தப்பட்டது, இந்த ஆண்டும் இது தொடரும். ஆசிரியா்களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றின் அடிப்படையில்தான், மாணவா்களின் எண்ணிக்கை உயா்த்தப்படுகிறது.அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருக்கிற அனைத்து மாணவா்களுக்கும் இடம் கிடைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றாா் அவா்.