அதிமுக அலுவலகத்திற்கு வெளியே ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பொதுமக்களின் வாகனங்கள் மீது ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த வருவாய்த் துறையினர், தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இரு தரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட 400 பேர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அதிமுக அலுவலகத்திற்கு சீல்: உயர்நீதிமன்றத்தில் முறையீடு
இந்நிலையில், விடியோ காட்சிகளை ஆராய்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காக மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தெற்கு லெபனானில் 9 கிராமங்களின் மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

திருப்பத்தூர் தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன் வழக்கு: நாளை விசாரணை
தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் சி. ஜோசப் விஜய்!

நான்தான் கிங் பாடல்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

