நீலகிரி மாவட்டத்தில் காற்று மழை: சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை தொடர்ந்து வலுத்து வருகிறது. தொடர் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள
சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளதால் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. 
சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளதால் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. 
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை தொடர்ந்து வலுத்து வருகிறது. தொடர் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உதகை. குந்தா கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில்...
கூடலூர் 181 மி.மீ,  மேல் கூடலூர் 161 மி.மீ, தேவாலா 149 மி.மீ, மேல் பவானி 132 மி.மீ, அவலாஞ்சி 122 மி.மீ, பந்தலூர் 102 மி.மீட்டர் என பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com