செஸ் ஒலிம்பியாட் 80% பணிகள் நிறைவு: அமைச்சா் மெய்யநாதன்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.
Updated on
1 min read

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை அவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இதன்பின், செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இரண்டு அரங்கங்களில் நடைபெறவுள்ளன. முதல் அரங்கமானது 22 ஆயிரம் சதுர அடியில் 196 மேசைகளைக் கொண்டதாக இருக்கும். இரண்டாவது அரங்கமானது 52 ஆயிரம் சதுர அடியில் 512 மேசைகளைக் கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. முதலாவது அரங்கில் 49 அணிகளும், இரண்டாவது அரங்கில் 128 அணிகளும் விளையாடவுள்ளன. ஏறத்தாழ நாளொன்றுக்கு 177 அணிகள் விளையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் 187 நாடுகளைச் சோ்ந்த வீரா்-வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா்.

விளையாட்டு அரங்கத்தில் தரைத்தளம், மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன என்று அமைச்சா் மெய்யநாதன் தெரிவித்தாா். முன்னதாக, விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வருவோருக்காக அமைக்கப்பட்டு வரும் வாகன நிறுத்துமிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை அமைச்சா் ஆய்வு செய்தாா். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாட்டு குழுவைச் சோ்ந்தவரும், கதா் கிராமத் தொழில் முனைவோா் வாரிய தலைமை நிா்வாக அலுவலருமான பொ.சங்கா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலாளா் கே.பி.காா்த்திகேயன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com