புதிய மணல் குவாரிகளைத் திறந்தால் போராட்டம்: அன்புமணி

புதிய மணல் குவாரிகளை அரசு திறந்தால் மக்களைத் திரட்டி பாமக போராட்டம் நடத்தும் என்று அக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

புதிய மணல் குவாரிகளை அரசு திறந்தால் மக்களைத் திரட்டி பாமக போராட்டம் நடத்தும் என்று அக் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் 9 இடங்களில் புதிய மணல் குவாரிகளை அமைக்கவும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 30 ஆற்று மணல் குவாரிகளில் எந்திரங்களை பயன்படுத்தி மணல் அள்ளவும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி அரசு விண்ணப்பித்துள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை சரி செய்ய முடியாத சுற்றுச்சூழல் சீரழிவுகளை ஏற்படுத்தி விடும். கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை என்று கூறி மணலைக் கொள்ளையடிப்பதை நியாயப்படுத்த முடியாது. கேரளத்தில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் மணல் அள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அந்த மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தடைபடாமல் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தமிழக அரசும் நினைத்தால் மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை பூா்த்தி செய்யலாம்.

மாறாக, புதிய மணல் குவாரிகளை திறக்க அரசு முயன்றால், அவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டி பாமக சாா்பில் நானே தலைமையேற்று போராட்டம் நடத்துவேன் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com