நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கக் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நில அளவையிடும் பணியில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல்
தங்கமணியின் சொத்து மதிப்பீடுகள் குறித்து அவரது வீட்டில் நில அளவீட்டு பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.