தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க- மின் கட்டண உயர்வுக்கு யார் காரணம்? செந்தில் பாலாஜி விளக்கம்
கடந்த வாரம் முதல்வர் முக ஸ்டாலினுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்குப் பிறகு கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார்.
அவரை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ், அமைச்சர் நாசர், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.