முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

4 லட்சம் பேர் விண்ணப்பம்: அரசுக் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்! ஏன்?

தமிழகத்தில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

News image
Updated On :29 ஜூலை 2022, 9:31 am IST

தமிழகத்தில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் உள்ள நிலையில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், அரசுக் கல்லூரிகளில் சிறந்த உள்கட்டமைப்பு தேவை என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் (டிசிஇ) தரவுகளின்படி, இந்த ஆண்டு தமிழக அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 4,07,045 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

ஆனால், விண்ணப்பப் பதிவு முடிவுடையும் புதன்கிழமைக்குள் விண்ணப்பித்த 4 லட்சம் பேரில் 2,98,056 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளதாகவும் கட்டணம் செலுத்தியவர்கள் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுவே, கடந்த ஆண்டு 2.29 லட்சம் விண்ணப்பங்கள் வந்த நிலையில், இந்த ஆண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் கல்லூரியில் இடம் கிடைப்பது கடினமாக இருக்கும் என்றும் கூறினர்.

'கரோனா தொற்றுநோயால் நிதி நெருக்கடி ஏற்பட்டதாலும் அரசுக் கல்லூரிகளில் குறைந்த கட்டணம் என்பதாலும் இந்த ஆண்டு அதிக விண்ணப்பம் வந்திருக்கலாம். 

மேலும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், பொறியியல் மீதான ஆர்வம் குறைந்து வருவதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான தேவையை உயர்த்தியுள்ளது' என்றனர். 

தமிழ்நாடு அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் சங்கத் தலைவர் வீரமணி கூறுகையில், 'இந்த தொற்றுநோய்க் காலம், அரசுக் கல்லூரிகளின் மதிப்பை மக்களுக்கு உணர்த்தியுள்ளது. குறைந்த கட்டணமும், நல்ல ஆசிரியர்களும் இருப்பதால் அதிகமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். கல்லூரிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமித்து முன்னுரிமை அடிப்படையில் அதிக வகுப்பறைகளை கட்ட வேண்டும்' என்று கூறியுள்ளார். 

'கல்லூரிகளில் 7,000-க்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும்' என்கிறார் அரசுக் கல்லூரியின் பேராசிரியர் பி. வைஜெயந்தி.

ஒவ்வொரு ஆண்டும் அரசுக் கல்லூரிகளில் 20-25 சதவீதம் இடங்கள் அதிகரித்து வருவதாகவும் தேவைப்பட்டால் இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.