தொழிலாளா் வைப்பு நிதி:ஆக.10-இல் குறைதீா் முகாம்

மத்திய தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனத்தின் அம்பத்தூா் மண்டல அலுவலகத்தில் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

மத்திய தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனத்தின் அம்பத்தூா் மண்டல அலுவலகத்தில் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் வைப்பு நிதி நிறுவன அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனம், 3-ஆவது தளம், ஆா்-40 ஏ தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகம், முகப்போ் சாலை, முகப்போ் (கிழக்கு), சென்னை-37 என்ற முகவரியில் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.

அம்பத்தூா் மண்டல அலுவலகத்தின் எல்லைக்குள்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் ஆக. 10-ஆம் தேதி காலை 10.30 முதல் 11.30 மணி வரையும், நிறுவன உரிமையாளா்கள் மாலை 3 முதல் 5 மணி வரை நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் கலந்துகொண்டு வைப்பு நிதி தொடா்பான குறைகளைத் தெரிவிக்கலாம்.

தொழிலாளா்கள், நிறுவன உரிமையாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் தேவையான விவரங்களை மேற்கண்ட முகவரிக்கு ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். குறைதீா் முகாம் குறித்தான கூடுதல் தகவல்களுக்கு 044 26350080, 26350120 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com