ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

முதலீடுகளே அமைதிக்கு சாட்சி! முதல்வர் பெருமிதம்

முதலீடுகள் தேடி வருவதே அமைதிப் பூங்காவாக தமிழகம் இருப்பதற்கான சாட்சி என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2022, 3:59 am IST

முதலீடுகள் தேடி வருவதே அமைதிப் பூங்காவாக தமிழகம் இருப்பதற்கான சாட்சி என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
 திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முதல்வரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள், அவற்றுக்கு அவர் அளித்த பதில்கள்:-
 கேள்வி: வேளாண்மை விரிவாக்கத் திட்டத்தில், தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் வகையில் பட்டியலின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அனைத்து விவசாயிகளையும் உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே?
 பதில்: தற்போது, ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் என அறிவித்துள்ளோம். பிற்காலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
 கேள்வி: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். உங்களுடைய பார்வையில் கடந்த ஓராண்டில் சட்டம் - ஒழுங்கு எப்படி உள்ளது?
 பதில்: நானும் இருக்கிறேன் என்று மக்களுக்குச் சொல்வதற்காக ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சித் தலைவர் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கலவரம், ஜாதி, மத சண்டைகள், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், வன்முறைகள் நடக்காத ஆட்சியாக இன்று வரை தொடர்கிறது.
 தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கிறது என்ற காரணத்தினாலேயே தமிழகத்துக்கு பல்வேறு முதலீடுகளும் தேடி வரக் கூடிய சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதுவே தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதற்கு சாட்சி.
 கேள்வி: அரசு ஊழியர்கள் பலர் ஒரேநாளில் ஓய்வு பெற்றுள்ளனர். இன்னும் அடுத்தடுத்த மாதங்களில் ஏராளமானோர் ஓய்வு பெறவும் உள்ளனர். இந்தச் சூழலில் ஓய்வு பெறும் அனைவருக்கும் பணப் பலன்கள் முழுமையாக கிடைக்குமா? ஓய்வு பெறும் வயது வரம்பு குறைக்கப்படுமா?
 பதில்: அதைப் பற்றி எல்லாம் கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஆலோசனை முடிந்த பிறகு விளக்கமாக அறிவிக்கப்படும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
 கேள்வி: தமிழக அரசின் முக்கியமான விஷயங்கள் எல்லாம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எப்படி போகிறது?
 பதில்: அண்ணாமலை அரசியல் செய்கிறார்; நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம் -}முதல்வர் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.