தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் எழுதாத 6.79 லட்சம் மாணவர்கள் துணைத் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கக் கோரி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்த பொதுத் தேர்வுகளில், 12ஆம் வகுப்பை சேர்ந்த 1.95 லட்சம், 10ஆம் வகுப்பை சேர்ந்த 2.25 லட்சம், 11ஆம் வகுப்பை சேர்ந்த 2.58 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 6,79,467 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
இதையும் படிக்க | அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி
இதையடுத்து, பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை துணைத் தேர்வில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.