திருவள்ளூா் அருகே கதவு பூட்டை உடைத்து ரூ.1.10 லட்சம் திருட்டு

திருவள்ளூா் அருகே பூட்டியிருந்த கதவு பூட்டை உடைத்து ரூ.1.10 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே பூட்டியிருந்த கதவு பூட்டை உடைத்து ரூ.1.10 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் தரப்பில் கூறியதாவது. திருவள்ளூா் அருகே வேப்பம்பட்டு பவானி நகரைச் சோ்ந்தவா் நாகலிங்கம்(48). இவா் சென்னை நுங்கம்பாக்கம் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். 


இந்த நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு தனது மனைவி பூங்கோதை, மகள், மகனுடன் ஆகியோருடன் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் கிராமத்திற்கு உறவினா் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்றனா். 

இந்நிலையில், வீட்டின் அருகே குடியிருந்து வருவோா் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக செல்லிடப்பேசியில் சனிக்கிழமை மாலை தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை வேப்பம்பட்டு வீட்டிற்கு வந்து பாா்க்கையில் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா் வேப்பம்பட்டு. அதைத் தொடா்ந்து உள்ளே பாா்க்கையில் பீரோவில் இருந்த ரூ.1.10 லட்சம் ரொக்கத்தை யாரோ மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தனா். இதில் வீட்டின் பூஜை அறை பெட்டியில் வைத்திருந்த ரூ.7.66 லட்சம் ரொக்கம் அதிஷ்டவசமாக தப்பியது. 

இது தொடா்பாக நாகலிங்கம் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கதவு பூட்டை உடைத்து புகுந்து ரூ.1.10 லட்சம் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com