பிரதமர் மோடியுடன் அன்புமணி சந்திப்பு

பாமக தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அன்புமணி ராமதாஸ், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பிரதமர் மோடியுடன் அன்புமணி சந்திப்பு


பாமக தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அன்புமணி ராமதாஸ், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் கடந்த மே 28-ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற முடிவு செய்த அன்புமணி, மே 29-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்.

இதைத் தொடர்ந்து, தற்போது அவர் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று நான் சந்தித்த போது, பாமக தலைவராக பொறுப்பேற்றமைக்காக எனக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். கோதாவரி - காவிரி இணைப்பு, நீட் விலக்கு, காலநிலை மாற்றம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நான் முன்வைத்தேன்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com