தமிழ்நாட்டில் புதிதாக 249 பேருக்கு கரோனா

​தமிழ்நாட்டில் புதிதாக 249 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழ்நாட்டில் புதிதாக 249 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சமீபத்திய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய முழு விவரங்களும் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 249 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,57,382 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 148 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,18,025 பேர் குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்புகள் ஏற்படாததால், மொத்த பலி எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.

இன்றைய நிலவரப்படி இன்னும் 1,332 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

சென்னை - 124
செங்கல்பட்டு - 40
கோவை - 20
காஞ்சிபுரம் - 12
திருவள்ளூர் - 11

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com