
கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:- கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாய் பாசனத்துக்கு வியாழக்கிழமை (ஜூன் 16) முதல் நீா் திறந்து விடப்படும்.
வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீா் திறப்பதன் மூலம், ராதாபுரம் வட்டத்திலுள்ள 17 ஆயிரம் ஏக்கா் கால்வாய் பாசன பகுதிகள் பயன்பெறும் என்று சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளாா்.