கிராம மக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி: 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளி

இளையான்குடி அருகே கிராம மக்களின் கூட்டு முயற்சியால், 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட தொடங்கியது கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட அரணையூர் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளி
27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட அரணையூர் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளி
Published on
Updated on
2 min read

இளையான்குடி அருகே கிராம மக்களின் கூட்டு முயற்சியால், 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட தொடங்கியது கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரணையூரில் 70 ஆண்டு காலமாக  ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளி கடந்த 27 ஆண்டு காலமாக ஆசிரியர்களின் முயற்சியின்மை மற்றும் கிராம மக்களின் ஆங்கில மோகத்தின் காரணமாக மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து பள்ளி மூடப்பட்டது.  

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார். மேலும், இப் பள்ளியில் பயின்றவர்கள் பலரும் உயர் அரசு பதவிகளை வகித்து வரும் நிலையில், புதிதாக பொறுப்பேற்ற ஊராட்சி மன்ற தலைவர் முனிஸ்வரி கனேசன் கிராம மக்களை அழைத்து, கிராமத்தில் பூட்டிக்கிடக்கும் பள்ளியை மீண்டும் திறக்க பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கிராம மக்களின் ஒத்துழைப்போடு, பூட்டிக்கிடக்கும் பள்ளியை மீண்டும் திறப்பதற்காக குழு அமைக்கப்பட்டு, அவர்கள்  அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை சந்தித்து மீண்டும் பள்ளியை திறப்பதற்கான நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால், 27 ஆண்டு காலமாக பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் உள்ள பள்ளிக்கு அரசு நிதி வழங்க இயலாது என அதிகாரிகள் தெரிவிக்கவே, கிராமத்தில் குடி இருக்கும் ஓவ்வொருவரிடமும் ரூ.2 லட்சம் வரை வசூல் செய்து பள்ளி கட்டடம் புதுப்பிக்கப்பட்டது.

முனிஸ்வரி கணேசன் (ஊராட்சி மன்ற தலைவர்)

தனியார் பள்ளியில் படிக்கும் பெற்றோர்களை நேரில் சந்தித்து மாணவர்களை மீண்டும் அரசு பள்ளியில் சேர்க்க வைத்தனர்.

தற்போது, 37 மாணவர்களுடன் பள்ளி மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்க தொடங்கியுள்ளது. மேலும், மாணவர்களுக்கு கிராம மக்கள் சார்பாக  மதிய உணவு ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

27 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது கிராமத்தில் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட தொடங்கியது கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த  பள்ளியை தொடர்ந்து நடத்துவதற்கு தேவையான கழிவறை, சுற்றுச்சுவர் மற்றும் மதிய உணவு திட்டத்தை அரசு  செயல்படுத்த வேண்டும் என்பது கிராம மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com