3 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் கரோனா உயிரிழப்பு: இணை நோயில்லா 18 வயது இளம்பெண் பலி

தமிழகத்தில் 90 நாள்களுக்குப் பிறகு மீண்டும் கரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் 90 நாள்களுக்குப் பிறகு மீண்டும் கரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

தஞ்சாவூரைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் எந்தவிதமான இணைநோயுமின்றி திடீரென கரோனாவுக்கு பலியானதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இது பொது மக்களை மட்டுமல்லாது மருத்துவத் துறையினரையே அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒமைக்ரான் மற்றும் அதன் உருமாற்ற வகைகளான பிஏ-4 மற்றும் பிஏ-5 வகை தீநுண்மிகள் இதுவரை உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால், ஒமைக்ரான் தொற்று தமிழகத்தில் ஊடுருவி கரோனா மூன்றாம் அலையாக தீவிரமடைந்தபோதுகூட உயிரிழப்பு விகிதம் அச்சப்படும் வகையில் இல்லை. இந்த நிலையில், வீரியம் குறைந்த அந்த தீநுண்மியால் தற்போது இணைநோய்கள் ஏதுமில்லாத இளம்பெண் உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதிலும், அவரது உயிரிழப்புக்கான காரணத்தை அறுதியிட்டுக் கூற இயலாத நிலை இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையே அதிகாரப்பூா்வமாக தெரிவித்திருப்பது மக்கள் மறந்திருந்த கரோனா மீதான பயத்தை மீண்டும் துளிா்விடச் செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி கடைசியாக கரோனாவுக்கு ஒருவா் உயிரிழந்தாா். அதன்பின்னா், தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. இத்தகைய சூழலில், புதிய வகை தீநுண்மியால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கடந்த இரு வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், குடும்பங்களில் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டது.

இருந்தபோதிலும், அதனால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்பதும், மிதமான பாதிப்புகளே ஏற்படுகின்றன என்பதும் ஆறுதலளிக்கும் விஷயமாக இருந்தன. தற்போது அதனை தகா்க்கும் வகையில் கரோனா உயிரிழப்புகள் மீண்டும் பதிவாகத் தொடங்கியுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி புதன்கிழமை ஒரே நாளில் 476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 221 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து முகக் கவசம், தனி நபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொது மக்கள் கட்டாயம் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

மற்றொருபுறம் பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 1,938- ஆக அதிகரித்துள்ளது. புதன்கிழமை தகவல்படி 169 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 18,481-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,026-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com