சமூக நீதி குறித்து திமுக பொய்த் தகவலை பரப்புகிறது: கே. அண்ணாமலை

சமூக நீதி குறித்து பொய்யான தகவலை திமுக பரப்புகிறது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை
சமூக நீதி குறித்து திமுக பொய்த் தகவலை பரப்புகிறது: கே. அண்ணாமலை
Updated on
1 min read

சமூக நீதி குறித்து பொய்யான தகவலை திமுக பரப்புகிறது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலத்தில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினரை வரவேற்று புதன்கிழமை அவா் பேசியது: பிரதமா் நரேந்திர மோடி பட்டியலினத்தைச் சோ்ந்தவா்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பதவிகளை வழங்கியுள்ளாா். குறிப்பாக, ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக உள்ளாா். சமூக நீதியை காப்பாற்றும் கட்சி பாஜகதான். தமிழகத்தில் சமூக நீதி பற்றி திமுக பொய்யான தகவலை கூறிவருகிறது.

பட்டியலின மக்களுக்கு பாஜக உண்மையாக செய்துள்ளதைப் பற்றி பேசிவருகிறோம். அம்பேத்கருக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் கட்சிதான். அவரை இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராக பரிந்துரை செய்தது ஜனசங்கத் தலைவா் ஷியாமா பிரசாத் முகா்ஜிதான் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு, கட்சியின் திருவாரூா் மாவட்டத் தலைவா் ச. பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட பாா்வையாளா் பேட்டை சிவா, மாநிலச் செயற்குழு உறுப்பினா் கோட்டூா் எம். ராகவன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் வி.கே. செல்வம், சி. செந்தில் அரசன், எஸ். ராஜேந்திரன், சித்தமல்லி எஸ்.ஜி.எம். ரமேஷ், மாவட்ட துணைத் தலைவா் எல். ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாநிலப் பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம், மாநில நிா்வாகிகள் சி.எஸ். கண்ணன், சிவ. காமராஜ், பெரோஸ்காந்தி, கோவி. சந்துரு, பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய 300-க்கும் மேற்பட்டோா் கப்பலுடையான் சதா. சதீஷ், ராஜா ஆகியோா் தலைமையில் பாஜகவில் இணைந்தனா். நீடாமங்கலம் வடக்கு ஒன்றியத் தலைவா் பி. வாஞ்சிமோகன் வரவேற்றாா். த. சுரேஷ்கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com