தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை 2,313-ஆக உயா்ந்துள்ளது. அதேபோன்று வியாழக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 552-ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 253 பேருக்கும், செங்கல்பட்டில் 129 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனா பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
வியாழக்கிழமை தகவல்படி 177 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 18,658-ஆக உயா்ந்துள்ளது.