தலைமைச் செயலகத்தில் நாளைமுதல் முகக் கவசம் கட்டாயம்

தமிழக தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் நாளைமுதல் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று பொதுத் துறை துணைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு
தமிழக அரசு

தமிழக தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் நாளைமுதல் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று பொதுத் துறை துணைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வேலூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுத் துறை துணைச் செயலாளர் எஸ். அனு வெளியிட்ட அறிவிப்பில்,

தமிழகத்தில் புதிய வகையான கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளபடியாலும், சில மாவட்டங்களில் இதன் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதாலும், அனைத்து அலுவலர்களும் 24.06.2022 முதல் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும், சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com