அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிடப் பொறுப்பாளர் சி.டி. ரவி சந்தித்து வருகின்றனர்.
சென்னை பசுமைச் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகின்றது. அதிமுக நிர்வாகிகள் தமிழ்மகன் உசேன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனுள்ளனர்.
இதையும் படிக்க | ஓ. பன்னீர்செல்வத்தை நோக்கி தண்ணீர் பாட்டில் வீச்சு
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தில்லியில் நாளை காலை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு அதிமுகவின் ஆதரவு கோரி எடப்பாடி பழனிசாமியை, பாஜக தலைவர் அண்ணாமலை, மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் சந்தித்து வருகின்றனர்.