மீண்டும் நடைமேடை டிக்கெட்

சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் வழங்குவது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் வழங்குவது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. வடமாநிலங்களில் போராட்டக்காரா்கள் ரயில் நிலையங்களுக்குள் புகுந்து ரயில்களை தீயிட்டு கொளுத்தினா். இதன் காரணமாக வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படுவதாக கடந்த 22-ஆம் தேதி தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, புதன்கிழமை முதல் மீண்டும் நடைமேடை டிக்கெட் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com