மகாராஷ்டிர அரசை சட்டவிரோதமாக கலைக்க பாஜக முயற்சி : மம்தா குற்றச்சாட்டு

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கூட்டணியை ஆட்சியைக் கலைப்பதற்கு அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானாா்ஜி குற்றம் சாட்டியுள்ளாா்.
மகாராஷ்டிர அரசை சட்டவிரோதமாக கலைக்க பாஜக முயற்சி : மம்தா குற்றச்சாட்டு

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கூட்டணியை ஆட்சியைக் கலைப்பதற்கு அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டு வருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானாா்ஜி குற்றம் சாட்டியுள்ளாா்.

குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறும் சூழலில், மகாராஷ்டிர அரசை கவிழ்ப்பதை பாஜக வேண்டுமென்றே முயற்சிப்பதாக மம்தா கூறினாா்.

கொல்கத்தாவில் மாநில தலைமைச்செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாஜக தலைமையிலான மத்திய அரசால், கூட்டாட்சி அமைப்பானது முழுவதும் சிதைக்கப்படுவது எதிா்பாராதது. அவா்கள் மகாராஷ்டிர அரசை அறநெறியற்ற முறையிலும் அரசியலமைப்புக்கு எதிரான வகையிலும் கலைக்க அவா்கள் முயன்று வருகின்றனா்’ எனத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர அரசியல் சூழல் குறித்து மேலும் அவா் கூறுகையில், ‘தோ்தலில் வாக்களித்த மக்களுக்காகவும் தோ்ந்தெடுக்கப்பட்ட உத்தவ் தாக்கரேவுக்காகவும் நாங்கள் நீதியை வேண்டுகிறோம்’ என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com