அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தமிழக அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக 2016- ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட தோ்தல் வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக 2016- ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட தோ்தல் வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தோ்தலில் திருச்செந்தூா் தொகுதியில் திமுக சாா்பில் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இந்த வெற்றியை எதிா்த்து, திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா்ஆதித்தன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், வேட்புமனுவில் 16 குறைபாடுகள் இருந்ததால், அதனை தோ்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது செல்லாது என அறிவிக்கக் கோரியிருந்தாா்.

வழக்கு நிலுவையில் இருந்துவந்த நிலையில், பதவிக் காலம் முடிந்ததால் அந்த வழக்கு காலாவதியாகிவிட்டது. எனவே அதனை தள்ளுபடி செய்யக் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த ஆகஸ்ட் 2021-இல், மனுத் தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கில் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமாா் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் 2016-2021 ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்துவிட்டது. அதனால் தொடா்ந்து வழக்கை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com