தமிழக ரயில்வே பணியில் வட மாநிலத்தவரை சேர்க்க நடைபெற்ற முயற்சி எதிர்ப்பு காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதுடன் அனைத்து சென்னை தேர்வர்களுக்கு பணிநியமனம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளில் வட மாநிலத்தவர்களை சேர்க்கும் நிகழ்வுகளுக்கு அனைத்து தரப்பினரும் தொடர்ந்து கண்டித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தெற்கு ரயில்வே காலிப் பணியிடங்களில் கோரக்பூர் தேர்வர்களை நியமிக்கும் முடிவு தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதுடன், அந்த பணியிடங்கள் அனைத்து சென்னை தேர்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை ஆர்ஆர்பி தேர்வு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகோ பைலட் தேர்வர்களை விட்டு விட்டு, கோரக்பூர் தேர்வர்கள் 55 பேரை நியமிக்க எடுத்த முடிவு எனது தலையீட்டின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு தெற்கு ரயில்வே காத்திருப்போர் பட்டியலில் இருந்த 17 பேருக்கு முதலில் வேலை அளிக்கப்பட்டது. இப்போது மீதி இருந்த 39 பேருக்கும் வேலை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இத்துடன் காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைத்து சென்னை ஆர் ஆர் பி தேர்வர்களும் வேலை பெறுகிறார்கள்.
இதன் மூலம் இனி சம்பந்தப்பட்ட ரயில்வேயைச் சேர்ந்தவர்களை விட்டுவிட்டு வேறு ரயில்வே தேர்வர்களை நியமிக்கும் பழக்கம் எதிர்காலத்தில் கைவிடப்படும் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம்.
இத்துடன் மெரிட்டில் தேர்வாகி மருத்துவ தகுதி மறு ஆய்வில் தகுதி பெற்ற ஐந்து பேருக்கும் வேலை வழங்கப்பட்டுள்ளது.
காத்திருப்போர் பட்டியல் தேர்வர்களின் பட்டியல் 2 ஆண்டுகளை தாண்டி விட்டதால் அவர்களுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை வைக்கப்படும் என்று தெரிகிறது. இதனை தாராள மனப்பான்மையுடன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுகிறேன்.
இந்த தேர்வில் பெரும்பாலான தேர்வர்கள் தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையில் சேர இருக்கிற காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.
à®à®°à¯ à®à®°à¯ பி;
â Su Venkatesan MP (@SuVe4Madurai) June 26, 2022
à®à¯à®°à®à¯à®ªà¯à®°à¯ தà¯à®°à¯à®µà®°à¯à®à®³à¯ நியமனம௠மà¯à®´à¯à®®à¯à®¯à®¾à®
à®®à¯à®±à®¿à®¯à®à®¿à®ªà¯à®ªà¯.
à®à¯à®©à¯à®©à¯ தà¯à®°à¯à®µà®°à¯à®à®³à¯ à®à®©à¯à®µà®°à¯à®à¯à®à¯à®®à¯ பணிநியமன à®à®¤à¯à®¤à®°à®µà¯.
à®à®®à®¤à¯ பà¯à®°à®¾à®à¯à®à®¤à¯à®¤à¯à®à¯à®à¯ à®®à¯à®´à¯ வà¯à®±à¯à®±à®¿.
à®à®®à¯à®ªà®¨à¯à®¤à®ªà¯à®ªà®à¯à® ரயிலà¯à®µà¯à®¯à¯ விà®à¯à®à¯à®µà®¿à®à¯à®à¯ வà¯à®±à¯ ரயிலà¯à®µà¯ தà¯à®°à¯à®µà®°à¯à®à®³à¯ நியமிà®à¯à®à¯à®®à¯ à®®à¯à®±à¯à®¯à¯ à®®à¯à®±à¯à®±à®¿à®²à¯à®®à¯ à®à®´à®¿à®à¯à® à®à®¨à¯à®¤ வà¯à®±à¯à®±à®¿ à®à®°à¯ à®®à¯à®²à¯à®à®²à¯. #RRB pic.twitter.com/zTvchSvVnt
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










