அரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு: தமிழக அரசு

அரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: அரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசாணைகளை தாக்கல் செய்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.  மேலும் அரசு வேலைவாய்ப்பில் 3-ம் பாலினத்தவரை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

3-ம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு கோரி சுதா என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

தமிழக அரசு அரசாணைகளை தாக்கல் செய்ததையடுத்து, இந்த  வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com