எடப்பாடி: எடப்பாடி நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு அமைதியான முறையில் நடைபெற்றது.
எடப்பாடி நகராட்சியின் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை 10 மணி முதல் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையாளருமான சேகர் புதிய நகர்மன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 நாடுகளை சேர்ந்த வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அமைதியான முறையில் பதவி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து வரும் 4-ஆம் தேதி நகராட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.