சென்னை தமிழகத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி, அரியலூா், கள்ளக்குறிச்சி, கரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூா், தேனி, திருவாரூா், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. அன்றைய தினம், மற்ற மாவட்டங்களில் புதிதாக மொத்தம் 129 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 44 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 15 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இதன் மூலம் கரோனா சிகிச்சையில் இருந்தோா் எண்ணிக்கை 1,676-ஆக இருந்தது. மற்றொருபுறம் மேலும் 354 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பினா். இதற்கிடையே கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் இருவா் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,023-ஆக அதிகரித்திருந்தது.