இன்னும் சற்று நேரத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல்

தமிழக சட்டப் பேரவை இன்று காலை கூடுகிறது. வரும் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இன்னும் சற்று நேரத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல்
இன்னும் சற்று நேரத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல்
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்டப் பேரவை இன்று காலை கூடுகிறது. வரும் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் இரண்டாவது ஆண்டாக தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாா்.

சட்டப்பேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு சட்டப் பேரவைக் கூட்டம் தொடங்கவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளன.

புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பேரவை மண்டபத்தில் இட நெருக்கடி காரணமாக, அனைத்து உறுப்பினா்களின் இருக்கைகளுக்கு முன்பாக கையடக்கக் கணினி பொருத்தப்பட்டுள்ளது. கலைவாணா் அரங்கத்தில் கூட்டம் நடைபெற்றபோது, பெரிய திரை கொண்ட மேஜைக் கணினி வைக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com