மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

74 நாள்கள் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை; உண்மை பதிலை அளித்துள்ளேன்: ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்திலிருந்து 8 முறை சம்மன் அனுப்பப்படவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

News image
ஓ.பன்னீர்செல்வம்
Updated On :22 மார்ச் 2022, 1:16 pm

DIN

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்திலிருந்து 8 முறை சம்மன் அனுப்பப்படவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்றும், இன்றும் காலை - மாலை என்று ஆணையத்தில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒத்துழைப்பு அளித்து பதிலளித்துள்ளதாகவும் கூறினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக ஓ.பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 22) ஆஜரானார். 

அவர்களுடைய விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உண்மையான உரிய பதிலை அளித்துள்ளேன். முரணான பதிலை நான் அளிக்கவில்லை. 

நேற்றும், இன்றும் காலை - மாலை என்று, ஆணையத்தில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஒத்துழைப்பு அளித்து பதிலளித்துள்ளேன்.

ஆணையத்திலிருந்து 8 முறை சம்மன் அனுப்பப்பட்டதாக பரவிய தகவல் பொய்யானது. 7 முறை சம்மன் அனுப்பப்பட்டு 6 முறை எனக்கு கடிதம் கிடைத்தது. 

ஒரு முறை பட்ஜெட் இருந்ததாலும், ஒரு முறை சொந்த காரணத்தாலும் என்னால் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக முடியவில்லை. ஆணையத்தில் தெரிந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால், உண்மையை ஆணையம் தான் கண்டறியும் என்று கூறினார். 

பேட்டியின்போது, சசிகலா குறித்த கேள்விக்கு, சசிகலாவை 'சின்னம்மா' என்று குறிப்பிட்டு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர் மீது எனக்கு சந்தேகமில்லை. தனிப்பட்ட முறையில் மதிப்பும், மரியாதையும் உள்ளது என்று குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.