நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் விஷவாயு தாக்கி 43 பேர் பலி: மத்திய அரசு

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கழிவு நீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்து விஷவாயு தாக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :22 மார்ச் 2022, 9:09 pm IST


தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கழிவு நீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்து விஷவாயு தாக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கழிவு நீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்து விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்த 22 மாநிலங்களுக்கான தரவுகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே மக்களவையில் எழுத்துப்பூர்வமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்வைத்தார். இந்தத் தரவுகளின் அடிப்படையில், கடந்த 5 ஆண்டுகளில் அதிகம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் அதிகளவாக உத்தரப் பிரதேசத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 45 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 43 பேர் உயிரிழந்த நிலையில் 42 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தில்லியில் 42 பேர் உயிரிழந்து, அதில் 37 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், உத்தரப் பிரதேசத்தில் உயிரிழப்பு பதிவாகவில்லை. கர்நாடகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், 5 ஆண்டுகளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

  20172018201920202021
1.உத்தரப் பிரதேசம்15112600
2.தமிழ்நாடு791395
3.தில்லி13111044


கோவா, புதுச்சேரி, திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு உயிரிழப்புகள்கூட பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.