28, 29-ல் அரசு ஊழியர்கள் போராடினால் சம்பளம் இல்லை: தலைமைச்செயலாளர் 

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.
வெ.இறையன்பு
வெ.இறையன்பு

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

வருகிற மார்ச் 28, 29 தேதிகளில் நாடு முழுவதும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதில், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 11 தொழிற்சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனிடையே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் உள்ளிட்ட  துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் மற்றும் மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்த நிலையில் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிடில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் பணிக்கு வந்தவர்கள, வராதவர்கள் பற்றிய தகவல்களை துறைவாரியாக அனுப்பி வைக்கவும் அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் தலைமைச்செயலர் வெ.இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com