சேலம்: வனவாசி பேரூராட்சியைக் கைப்பற்றியது அதிமுக

சேலம் மாவட்டம் வனவாசி பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.
வனவாசி பேரூராட்சித் தலைவர் ஞானசேகரன்
வனவாசி பேரூராட்சித் தலைவர் ஞானசேகரன்

சேலம் மாவட்டம் வனவாசி பேரூராட்சித் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.

வனவாசி நகர அதிமுக செயலாளரும் வனவாசி பேரூராட்சி 11-வது வார்டு உறுப்பினருமான ஞானசேகரன் பேரூராட்சித் தலைவருக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில், திமுக 2 வார்டுகளிலும் அதிமுக 8 வார்டுகளிலும் சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களில்  திமுக உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com