சேலம் மாவட்டம் வனவாசி பேரூராட்சித் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.
வனவாசி நகர அதிமுக செயலாளரும் வனவாசி பேரூராட்சி 11-வது வார்டு உறுப்பினருமான ஞானசேகரன் பேரூராட்சித் தலைவருக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில், திமுக 2 வார்டுகளிலும் அதிமுக 8 வார்டுகளிலும் சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களில் திமுக உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்கவில்லை.