தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.
அவரது அறிவிப்பு விவரம்: ரமலான் நோன்பு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நோன்பு காலம் இருந்த நிலையில், ரமலான் மாதம் முடிந்து அடுத்த மாதம் சவ்வால் பிறப்பதற்கான பிறை ஞாயிற்றுக்கிழமை தென்படவில்லை. இதனால் 30-ஆவது நாளான வரும் செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.